வேலூர், ஜூன் 30- விஐடியில் பிடெக் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு (விஐடிடி-2022) ஜூன் 30 அன்று துவங்கியது. ஜுலை 6 ஆம் தேதி வரை கணினி முறையில் துபாய், குவைத், மஸ்கட் மற்றும் கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளிலும், உள்நாட்டிலுமாக 123 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூலை 8 ஆம் தேதி www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளி யிடப்பட்டு அன்றைய தினமே ஆன்லைன் கலந்தாய்வு துவங்குகிறது. விஐடி வேலூர் வளாகத்தில் உள்ள நுழைவுத் தேர்வு மையத்தில் நடை பெற்ற நுழைவுத் தேர்வை விஐடி துணைத் தலைவர்கள் முனைவர்.சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தர் டாக்டர் ராம்பாபு கோடாளி, இணை துணை வேந்தர் டாக்டர் எஸ்.நாராயணன் ஆகியோர் பார்வையிட்டனர். ஜி.வி. பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு கல்வி உதவி ஒன்றிய, மாநில கல்வி வாரியம் நடத்தும் 12 ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவிலான முதலிடம் பெறும் மாணவர்களுக்கு விஐடி பல்கலைக்கழகத்தின் ஜி.வி.பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பி.டெக் படிப்பு பயிலும் 4 ஆண்டுகால முழுவதும் 100 விழுக்காடு படிப்பு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அத்துடன் விஐடி நுழைவுத் தேர்வில் 1 முதல் 50 ரேங்குக்குள்ளாக தகுதி பெறும் மாணவர்களுக்கு 75 விழுக்காடு கட்டண சலுகையும், 51 முதல் 100 ரேங்குக்குள்ளாக தகுதி பெறும் மாணவர்களுக்கு 50 விழுக்காடு படிப்பு கட்டண சலுகையும், 101 முதல் 1000 ரேங்குக்குள்ளாக தகுதி பெறும் மாணவர்களுக்கு 25 விழுக்காடு படிப்பு கட்டண சலுகையும் 4 ஆண்டு கால முழுவதும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திர மற்றும் மத்திய பிரதேசத்திலுள்ள கிராமப்புற ஏழை, எளிய குடும்பத்தின் மாண வர்களும் விஐடி பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயிலும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஸ்டார்’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு 100 விழுக்காடு படிப்பு கட்டண சலு கையுடன் உணவு மற்றும் விடுதி வசதியுடன் விஐடி பல்கலைக் கழகத்தில் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.