districts

img

வேலூர் விமான நிலைய பணிகளுக்கு ரூ. 22 லட்சம் நிதி ஒதுக்கீடு

வேலூர், ஏப் 6 - வேலூர் அப்துல்லாபுரத்தில் விமான நிலையத்தை ஒன்றிய அரசின் உதான் திட்டத்தின் கீழ் இந்த விமான நிலையத்தை பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு  இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி யது. இதையடுத்து நிலங்கள் கையகப் படுத்தப்பட்டு, ஓடுதளம், டெர்மினல், தள வாட கருவிகள், பயணிகள் காத்திருக்கும் அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. இதன் நடுவே இருந்த தார் வழி சாலையும் விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்டது.  பல கோடி ரூபாய் செலவான நிலை யில் விமான நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வர மேலும் சுமார் 10 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. ஆனால்  அதை கையகப்படுத்துவதில் பல சிக்கல் கள் எழுந்தது. இதனால் காலதாமதம் ஏற்பட்டு பல மாதங்களாக பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. அங்குள்ள ஓடுதள பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் செடி, கொடிகள் முளைத்தன. டெர்மினல்  கட்டிடமும் பராமரிப்பின்றி காணப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது இருக்கும் இடத்தை வைத்துக் கொண்டு விமான நிலையத்தை பயன் படுத்தலாம் என்றும் விமான ஆணையகம் சார்பில் தெரிவித்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஓடுதள  பாதையில் உள்ள செடி, கொடி மரங்களை  அகற்றவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் ரூ.22 லட்சம் ஒதுக்கப் பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட் டுள்ளது என தெரிவித்தனர்.