வேலூர், ஜன. 3- பள்ளிகொண்டா - குடி யாத்தம் சாலையில் போக்கு வரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டி யன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: பள்ளிகொண்டா - குடி யாத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலை சாவடி வரை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை மாற்றி அமைக்கும் பணி புதன்கிழமை முதல் நடைபெறுகிறது. இந்த பணியை நெடுஞ்சாலை, மின் சாரத்துறையினர் ஒருங்கி ணைந்து மேற்கொள்ள உள்ள னர். இப்பணிகள் முடியும் கால மான சுமார் 15 நாட்களுக்கு இந்த சாலையில் போக் குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. குடியாத்தத்தில் இருந்து பள்ளி கொண்டா வழியாக வேலூர் செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வடுகன் தாங்கல், காட்பாடி வழி யாக செல்ல வேண்டும். வேலூரில் இருந்து பள்ளி கொண்டா வழியாக குடியாத்தம் செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை 48-ஐ பயன்படுத்தி செதுவாலை, விரிஞ்சிபுரம் வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலை 75-ஐ அடைந்து வடுகன்தாங்கல் வழியாக குடியாத்தம் செல்ல வேண்டும்.
குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா வழி யாக ஒடுகத்தூர், அணைக்கட்டு செல்லும் வாகனங்கள் குடி யாத்தத்தில் இருந்து மேல்பட்டி சாலையில் உள்ளி கூட்ரோடு சந்திப்பை அடைந்து ஒடுகத்தூர், அணைக்கட்டு செல்ல வேண்டும். கிருஷ்ணகிரி மார்க்கத்தில் இருந்து பள்ளிகொண்டா வழி யாக குடியாத்தம் செல்லும் வாகனங்கள் மாதனூர் - உள்ளி கூட்ரோடு மும்முனை சந்திப்பு வழியாக மேல்பட்டி சாலை வழியாக குடியாத்தம் செல்ல வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றம் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பணி முடியும் வரை நடை முறைப்படுத்தப்படும். மற்ற நேரங்களில் தற்போது உள்ள படி அதே சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம். கனரக வாகனங்கள் பள்ளி கொண்டாவிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உள்ளதாலும், மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் நீண்ட காலத்துக்கு பயன்படுத்த பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி தவிர்க்க முடியாது. போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.