districts

img

காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உச்ச நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்க வேண்டும்

வேலூர், ஜூலை 15 - வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை பகுதி யில் உள்ள நிதியுதவி தொடக்கப்பள்ளி யில் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் 81 மாணவர்களுக்கு முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஒரு டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டுமென காவிரி ஒழுங்காற்று குழு உத்தர விட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசு அதை ஏற்காமல் 8000 கன அடி தண்ணீர் மட்டுமே தருவோம் எனக் கூறுகிறார்கள். தற்போது கர்நாடகாவில் கபினி அணையில் இருந்து அதிகளவில் உபரி நீர் வந்து கொண்டிருக்கிறது.

கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ், ஹேமாவதி உள்ளிட்ட நான்கு அணை களில் இருந்து தான் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும். ஆனால் கர்நாடக அரசு அதிலிருந்தும் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வெறும் 4,047 கனஅடி தண்ணீர்தான் வந்துள்ளது. காவிரி பிரச்சினை குறித்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளேன்.

தற்போது கர்நாடகாவில் அதி களவில் மழை பெய்து வரு கிறது. அதனால் அவர்கள் எந்த அள விற்கு தண்ணீர் திறந்து விடுகிறார்கள் என்பதை பொறுத்து, முதலமைச்ச ருடன் ஆலோசனை செய்து அதனடிப் படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் காவிரியில் இருந்து உபரி நீர் மட்டுமே வருகிறது, உரிமை நீர் வரு வதில்லை என்றும் அவர் கூறினார். காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு ஏற்பட உச்ச நீதிமன்றம் இறுதி முடிவு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றமும் அவ்வப்போது உத்தரவு களை பிறப்பித்து தான் வருகிறது ஆனால் கர்நாடகா அரசுதான் அதனை பின்பற்றவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.