districts

img

எதிர்ப்பை மீறி மதுக்கடை: மக்கள் ஆவேசம்

வேலூர், ஏப். 7- வேலூர் வட்டம் சத்துவாச்சாரி மந்தைவெளி, குறிஞ்சி நகர் பகுதி யில் சுடுகாட்டுக்குச் செல்லும் வழி யில் கடந்த மாதம் டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போதே எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை யிட்டனர். இதனால், திறப்பு விழா ரத்துசெய்யப்பட்டது.  இந்நிலையில், வியாழனன்று (ஏப். 7) அதே இடத்தில் மதுபானக்கடையை மீண்டும் திறந்தனர். இதையடுத்து அப்பகுதி பெண்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி.சங்கரி தலை மையில் திரண்டனர். இப்பகுதியில் குடியிருப்புகள், பள்ளி, ஆரம்ப சுகா தார நிலையம் உள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், அரசு அதிகாரிகள் கூறாமல் நாங்கள் கடையை மூட முடியாது என மதுபான கடை ஊழியர்கள் தெரி வித்தனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் மதுக்கடைக்கு பூட்டு போட முயன்றனர். இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களின் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தால் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து காவல்துறையினரிடம் மனு அளித்த போராட்டக்குழுவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்ட நிர்வாகி எம்.வளர்மதி, சிபிஎம் வடக்கு தாலுகா செயலாளர் கே.பாண்டுரங்கன், கிளைச் செயலாளர் ஏ.கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.