வேலூர், ஏப். 11- குடியாத்தம் பகுதியில் தமிழக அரசு சார்பில் மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி மாட்டுவண்டித் தொழிலாளர்கள் போராட்ட த்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் குடி யாத்தம் தாலுகா ஒலக்காசி பகுதியில் மணல் குவாரி துவக்க வலியுறுத்தி குடி யாத்தம் நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு தலைவர் எஸ்.மூர்த்தி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.குப்பு துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.காத்தவராயன், துணைச் செயலாளர் சி.சரவணன், கே.சாமிநாதன் (ஆட்டோ சங்கம்), பி.குணசேகரன் (மரமேறும் தொழிலாளர் சங்கம்), எஸ்.சிலம்பர சன் (பீடி சங்கம்), அசோகன் ஆகியோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின் முடி வில் நீர்வளத்துறை அதி காரிகளிடம் மனு அளித்த னர். இந்த போராட்டம் குறித்து ஏ.குப்பு கூறுகை யில், “குடியாத்தம் பகுதி யில் மணல் குவாரி அமைக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பல முறை தெரிவித்தார். ஆனாலும் துறை அதி காரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”என்றார். குடியாத்தம் ஒலக்காசி பகுதியில் மணல் குவாரி தொடங்கினால் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வு மேம்படும். ஏழை, எளிய மக்களுக்கு மிக குறைந்த விலையில் மணல் கிடைக்கும். ஆனால், தங்கள் ஊராட்சியில் குவாரி அமைக்கக் கூடாது என்று ஒலக்காசி ஊராட்சி மன்றத் தலைவர் கடிதம் அளித்துள்ளார்.எனவே, அவரை அழைத்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.