districts

கொசு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு தொடர் பணி வழங்க கோரிக்கை

வேலூர், ஜன. 3 - டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தொடர் பணி வழங்கக் கோரி சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.பி.ராமச் சந்திரன் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசு ராமன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் மற்றும் துப்புரவு தொழி லாளர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் மு.காசி, பீடி தொழிலாளர் சங்க செய லாளர் வி.நாகேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாவட்டத் தலைவர் டி.முரளி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினர். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட அமைப்பாளர்  எஸ்.கோகிலா நன்றி கூறினார். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுகளை ஒழிக்கு பணியில்ஈடுபடும் ஊழியர்களை அதிகபடுத்த வேண்டும், ஏற்கனவே பணி செய்த ஊழியர்களுக்கு தொடர் பணி வழங்க வேண்டும், டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசு ஒழிப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளர்களிடம் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் கடை பிடிக்கும் தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.