வேலூர், ஜூன் 6- வேலூர் விஐடியின் காந்தி கட்ட டத்திற்கு பசுமைக்கான பிளாட்டினம் தரச்சான்று தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனத்தில் விஐடியில் உள்ள கட்டடத்திற்க்கு தான் முதன் முதலாக பிளாட்டினம் தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் கட்டிடங்களை ஆய்வு செய்து பசுமை சான்று வழங்கி வருகிறது. அவ்வாறு சான்று பெற சில விதிமுறைகள் உள்ளன, தரத்திற்கேற்ப “சில்வர்”, “கோல்ட்”, “பிளாட்டினம் “ என மூன்று வகையான ரேட்டிங் அளிக்கப்படு கிறது. இதில் அதிகபட்ச ரேட்டிங்கான பிளாட்டினம் சான்று வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள காந்தி கட்டடத்திற்கு கிடைத்துள்ளது. வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள காந்தி பெயர் கொண்ட கட்டடத்தில், மாணவர்கள் மிகவும் வசதியான சூழலை உணரவும், பசுமை இல்ல வாயு நிலை உமிழ்வைக் குறைக்க கட்டி டத்தில் புல்வெளிகள், மரங்கள் மற்றும் செடி கள் உள்ளன. இந்தக் கட்டிடம் திறந்த வெளிகள், நல்ல காற்றோட்டம், இயற்கை விளக்குகள், துளையிடப்பட்ட முகப்பு, முற்றங்கள் மற்றும் தாழ்வாரங்கள் உள்ளிட்ட பல தனித்துவமான வடிவமைப்பு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் புதுமையான மற்றும் ஆற்றல் குறைவான குளிரூட்டும் அமைப்பு வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது.
அதன்படி விஐடி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு போதிய வசதிகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, புதுப் பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி, மின்சாரத்தை சேமிக்கும் விளக்குகள் மற்றும் மின்விசிறிகள் மேற்கூரையில் வெப்பத்தை எதிரொலிக்கும் வண்ணப்பூச்சு உள்ளிட்டவை அடங்கும். அனைத்து விதி முறைகளும் நிறைவேற்றப்பட்டு, ஐஜிபிசி அதிகாரிகள் கட்டடத்தை ஆய்வு செய்து பிளாட்டிணம் தரச்சான்று வழங்கி உள்ள னர். விஐடி துணைத்தலைவர் ஜி.வி. செல்வம் கட்டட வடிவமைப்பாளர் சஞ்சய் மோஹி மற்றும் இந்திய கட்டட வடிவமைப்பாளர் மையத்தின் தலைவர் ராஜீ ஆகியோர் முன்னிலையில் ஐஜிபிசியின் சார்பில் கிருத்திகா முத்துகிருஷ்ணன் பிளாட்டினம் மதிப்பீடு கேடயம் மற்றும் தரச்சான்றிதழை வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர். கோ. விசுவநாதனிடம் வழங்கினர். மேலும் இந்த கட்டடம் தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனத்தில் வி ஐ டிக்கு ( காந்தி கட்டடத்திற்கு ) தான் முதன் முதலாக பிளாட்டினம் தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.