வேலூர், அக். 19 - வேலூர் மாவட்டம், காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் பாவேந்தர் பாரதி தாசன் தமிழ் இலக்கிய மன்றத் துவக்க விழா பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற உலக தமிழர் பேரவை யின் நிறுவனர் பழ.நெடுமாறன் பேசுகை யில், “நமது மொழி மிகவும் தொன்மையான மொழி. வைகை கரை, கீழடி அகழ்வாய்வில் கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய மொழி தமிழ் மொழி என நிலை நாட்டப்பட்டுள்ளது”என்றார். 25 ஆயிரம் மக்கள் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்தை பிற மொழி பேசும் 120 கோடி மக்களின் மீது திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை தடுத்து தமிழை அனைத்து இடங்களிலும் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.