districts

img

தீக்குளித்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு கோ.சாமுவேல்ராஜ் ஆறுதல்

வேலூர் ஏப் 29- வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குகையநல்லூர் காலனியைச் சேர்ந்தவர் சரத்குமார். இவரை ஆற்றில் மணல் அள்ளி விற்பனை செய்து தங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என தொடர்ந்து மேல்பாடி காவல் உதவி ஆய்வாளர் கார்த்தி வலியுறுத்தி வந்துள்ளார்.  மேலும் சாதி ரீதியாக திட்டி தாக்கியுள்ளார். தொடர் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்ட சரத்குமார், உதவி ஆய்வாளர் தன்னை அடிக்கடி மிரட்டுவதாகக் கூறி, கடந்த 11ஆம் தேதி மேல்பாடி காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 17ஆம் தேதி இறந்தார். இந்நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநில பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ் சரத்குமார் வீட்டிற்கு வெள்ளி யன்று (ஏப். 29) சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் காவல்துறை வழக்கு பதிவு செய்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகை யில், எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 12 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், அதில் பாதித் தொகையை உடனே வழங்க வேண்டும், வழக்கை 6 மாத காலத்திற்குள் விரைந்து முடித்து உதவி ஆய்வாளர் கார்த்திக்க்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றார். உடன் சிபிஎம் வேலூர் மாவட்டச் செய லாளர் எஸ்.தயாநிதி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜெ.சீனிவாசன், கே.சாமி நாதன், காட்பாடி செய லாளர் சுடரொளியன், ராணிப்பேட்டை மாவட்டக் ழுகு உறுப்பினர் தா. வெங்கடேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச் செயலாளர் ப.செல்வன், வேலூர் மாவட்டச் செயலாளர் குபேந்திரன் ஆகியோர் இருந்தனர். இணைஞர் மரணத்திற்கு நீதி கேட்டு மே 9ஆம் தேதி காட்பாடியில் சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.