districts

img

வீரிய தைராய்டு விழிப்புணர்வு கருத்தரங்கம்

வேலூர் அக். 31- வீரிய தைராய்டு நோய் பாதிப்புகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தில் கொரோனாவின் தாக்கம் குறித்து வேலூர் நறுவீ மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் வேலூர் கிளை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. வீரிய தைராய்டு நோய் பாதிப்புகள் குறித்து மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் தலைவர் மருத்துவர் அரவிந்தன் நாயரும், பெண்களின் ஆரோக்கியத்தில் கொரோனா நோயின் தாக்கம் குறித்து மகப்பேறு மருத்துவ நிபுணர் மருத்துவர் ஜெயசீலா காமராஜூம் பேசினர். கருத்தரங்கின் நோக்கம் குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் கிளைச் செய லாளர் மருத்துவர் தானேஷ் குமார் விளக்கினார். இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் கிளை புரவலரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான முனைவர் ஜி.வி.சம்பத் கருத்தரங்கு மலரை வெளியிட்டார். இதில் மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் மருத்துவர் மதன் மோகன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் கோமதி, நறுவீ மருத்துவமனை இயக்குநர் மருத்து வர் திலிப் மத்தாய், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நித்தின் சம்பத் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்ட னர். முடிவில் இந்திய மருத்துவ சங்க வேலூர் கிளை பொருளாளர் மருத்துவர் திலகவதி நன்றி கூறினார்.