districts

img

ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க! வேலூர் திட்ட மின் ஊழியர் மாநாடு வலியுறுத்தல்

வேலூர், ஜூன் 26 - ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த தொழிலாளர்களுக்கு வாரியமே தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தி உள்ளது. மத்திய அமைப்பின் வேலூர் திட்டக் கிளை யின் 15ஆவது மாநாடு ஞாயிறன்று (ஜூன 26) தோழர்கள் எஸ்.பஞ்சரத்தினம், வி.இ.ஏக நாதீஸ்வரன் நினைவரங்கில் (வேலூரில்) நடைபெற்றது. இந்த மாநாட்டில், மின்சார சட்டத் திருத்தம் 2021ஐ கைவிட வேண்டும், பராமரிப்பு செய்யப்பட்ட பிரிவு அலுவலகங்களில் விபத்து ஏற்பட்டால் பிரிவு அலுவலக பொறியாளர் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அமைச்சரின் அறி விப்பை திரும்ப பெற வேண்டும், பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தப்பட்ட சரண்டர், பஞ்சப்படி போன்ற பணப்பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு கே.தருமன் தலைமை தாங்கினார். சங்க கொடியை இ.வெங்கடேசன் ஏற்றினார். கமலக்கண்ணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். எஸ்.இன்ப நாதன் வரவேற்றார். மாநில துணைத் தலை வர் கே.அம்பிகாபதி மாநாட்டை துவக்கி வைத்தார். செயலாளர் எம்.கோவிந்தராஜ் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் டி.ஜெகன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், மத்திய அமைப்பு மாநில நிர்வாகி கள் பி.ஜீவா, எஸ்.ஜோதி, திருப்பத்தூர் கிளைச் செயலாளர் சிவசீலன் மற்றும் தாமோதரன் (ஒய்வு பெற்றோர் நல அமைப்பு), கே.கோபிநாத் (மின் பொறியாளர் அமைப்பு) ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

புதிய நிர்வாகிகள்
திட்டத் தலைவராக எம்.கோவிந்தராஜ், செய லாளராக டி.ஜெகன், பொரு ளாளராக சின்னதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.