districts

img

இஸ்ரோ கண்காட்சி விஐடியில் தொடக்கம்

வேலூர், அக். 7- உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு இஸ்ரோவின் 3 நாள் கண்காட்சியை விஐடியில் வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் விசுவநாதன் பேசுகை யில்,“இந்தியா வளர்ந்த நாடுகளோடு விண்வெளி ஆய்வு மற்றும் தொழில் நுட்பத்தோடு போட்டி போட்டு வருகிறது” என்றார். அமெரிக்காவும், சோவியத் யூனியன் நாடு களும் மட்டுமே விண்வெளி ஆராய்ச்சியில் போட்டி யிட்டு வந்த காலம் மாறி தற்போது இந்தியாவும் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருந்து வருகிறது என்றும் தொழில் நுட்பம், மக்க ளின் பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ராணிப்பேட்டை பெல் செயல் இயக்குநர் ராஜீவ் சிங் பேசுகையில், “மாணவர்கள் கருத்துக் களை உள்வாங்கி படிக்க வேண்டும், அவ்வாறு படிக்கும்போது படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உலக நாடுகளில் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பொறுத்தவரை இந்தியா முதல் 5 இடங்களுக்குள் உள்ளது.  பண்டைய காலத்தில் இந்தியாதான் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னணியில் இருந்தது” என்றார். எதிர்வரும் காலங்களில் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என்றார். விண்வெளி ஆய்வுக்கு தேவை யான பல்வேறு உதிரிபாகங்  களை பெல் நிறுவனம் தயாரித்து கொடுப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கி றோம் எனவும் அவர் கூறினார். சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் துணை இயக்கு நர் சையது அமித் பேசுகை யில்,“ ஒவ்வொரு ஆண்டும் உலக விண்வெளி வாரத்தை நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் கொண்டா டப்படுகிறது.

மாண வர்கள்தான் நாட்டின் எதிர்காலம். விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி சம்பந்தப்பட்ட விஷ யங்களை மக்கள் அனை வரும் தெரிந்துகொள்ள வேண்டும்”என்றார். இந்திய விண்வெளித் துறையின் தந்தை யாக கருதப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய் 1960 களில் விண்வெளி ஆய்வு மற்றும் அதன் பயன்பாடுகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றும் என்று அப்போதே கணித்தார். இந்தியா, விக்ரம் சாராபாய் போன்ற தலைவர்களின் தலைமையாளும், தொலைநோக்குப் பார்வை யாலும் விண்வெளி தொழில்  நுட்பத்தில் இந்தியா தன்னி றைவு பெற்று சாமானிய மக்களின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். இந்த கண்காட்சி விஐடி யில் 9ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாண வர்களுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, வினாடி வினா, போஸ்டர் மற்றும் மாதிரி வடிவமைப்பு போட்டிகள் நடைபெற உள்ளது.  இதில் பங்கேற்க கட்டணம் ஏதும் கிடையாது. மாணவர்கள் https://wsw.vit.ac.in என்ற இணையம் வழியாக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.   விஐடி துணைத் தலை வர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணை வேந்தர் டாக்டர். எஸ்.நாராயணன் . பதிவாளர் டாக்டர். டி. ஜெயபாரதி, வேலூர் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.