வேலூர்,ஜன.24- விவசாயிகள் மகசூலை அதிகரிக்க மண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு அதிகாரி கள் அறிவுறுத்தியுள்ளனர். வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மகேந்திரபிரதாப் தீட்சித், குடி யாத்தம் வேளாண்மை உதவி இயக்குநர் உமா சங்கர், குடியாத்தம் மேல்ஆலத்தூர் மண் பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் விக்னேஸ்வரி உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- வேலூர் மாவட்ட விவசாயிகள் மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை செய்து, அதன் பரிந்துரைப்படி பயிர் மற்றும் உர அளவை மேற்கொள்ள அறி வுறுத்தப்படுகிறது.ஆய்வு செய்யப்பட்ட மண்மாதிரிகளுக்கு மண் வள அட்டை தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மண்ணில் பயிர்களுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் சரியான அளவிலும் பயிர்கள் எடுத்துக்கொள்ளும் நிலையிலும் இருத்தல் வேண்டும். மண் பரிசோதனை செய்து வழங்கப்படும் மண் வள அட்டையில் மண்னின் தன்மை, சுண்ணாம்பு நிலை உப்பின் நிலை, கார அமில நிலை, அங்கக் கரிம நிலை, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் போன்ற 16 வகை சத்துக்களின் நிலையை ஆராய்து அறிந்து மண் வள் அட்டை வழங்கப்படுகிறது.
மண் அதிக காரஅமில நிலை, உவர் நிலை இல்லாமல் நல்ல வடிகால் வசதியுடன் இருக்கும் மண்ணே வளமான மண்ணாகும். எனினும் தொடர் சாகுபடியாலும் உணவு உற்பத்திச் சுமையினாலும் வீரியரகப் பயிர்களாலும் மண் மாச டைந்து மண்ணிலிருந்து சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது. இதனால் சத்துக்களின் அளவு குறைந்து விடுகிறது. மேலும் பயிர்களுக்கு நுண்ணூட்டச்சத்துகளான தாமிரம், துத்தநாகம், இரும்பு, போரான் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் தேவைப்படும் அளவு குறைவாக இருந்தாலும், அவற்றால் ஏற்படும் மகசூல் இழப்பு பிரதானமாக இருக்கும். இக் குறைபாட்டின் அளவு மண் பரிசேதனை மூலமே தெரியவரும்.வேலூர் மாவட்ட விவசாயிகள், குடியாத்தம் வட்டாரத்தில் மேலாலத்தூரில் உள்ள மண் பரிசேதனை நிலையத்தில் தங்கள் ஆய்வு முடிவுகளை மண் வள மண் மாதிரிகளை கொடுத்து அட்டை மூலம் பெற்றுக்கொள்ளலாம். மண் அட்டையில் குறிப்பீட்டுள்ள மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் வள மற்றும் நுண்ணூட்டச் சத்துகளின் அளவை அறிந்து பயிர்களுக்கு தேவையான அளவே உரமிட்டு மகசூலை அதிகரிப்பதுடன் மண் வளமும் மேம்படுத்தலாம். மேலும் தேவைக்கேற்ப உரமிடுவதால் உரச் செலவையும் மிச்சப் படுத்தலாம். இவ்வாறு ஒவ்வொரு மண் அல்லது பாசன நீர் மாதிரிக்கு ரூ.20 பகுப்பாய்வு கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.