வேலூர், நவ. 5- வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் என்ஜீன்கள் மற்றும் எரிபொருள் குறித்த தேசிய அளவிலான 27ஆவது மாநாடு சனிக் கிழமை (நவ. 5) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய அரசின் நிதி ஆயோக் உறுப்பி னர் வி.கே.சரஸ்வத், அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆராய்ச்சி மைய இயக்குனர் கலைச்செல்வி, விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், கவுரவ விருந்தினராக nஜர்மன் நாட்டின் கிறிஸ்டியன் பெர்னகி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் விஸ்வநாதன் பேசுகையில், இந்த மாநாடு உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்துள்ளது. அவர்கள் எந்திரம், எரிப்பு மற்றும் எந்திரங்களில் மாற்று எரிபொருள் துறை பங்களிப்பில் ஆர்வமாக உள்ளனர். ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் பிரிவுகளை உள்ளடக்கிய இந்திய வாகனத் தொழில் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய ஒன்றாகும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் ஆகும். 2021-2022ஆம் ஆண்டில் சராசரியாக ஆண்டுக்கு 23 மில்லியன் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். அதில் சுமார் 5.6 மில்லியன் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2026ஆம் ஆண்டுக்குள் ஆட்டோ மொபைல் தொழில் 15 சதவீதம் கூடுதல் வளர்ச்சி பெற்று 300 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தியா உலகின் 2ஆவது பெரிய இரு சக்கர வாகனம் மற்றும் 4ஆவது பெரிய கார் உற்பத்தியாளராக உள்ளது . மொத்த உள் நாட்டு உற்பத்தியில் வாகனத் துறையின் பங்களிப்பு 1992-1993இல் 2.77 சதவீதத்தில் இருந்து 2021இல் சுமார் 15 சதவீதமாக அதிக ரித்துள்ளது. இது தவிர, தொழில்துறை வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களை ஏற்று மதி செய்கிறது, இந்திய வாகனத் துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 37 மில்லியன் மக்கள் பணியாற்றுகின்றனர் என்றார். இந்தியா தனது எண்ணெய் தேவை யில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. அதிநவீன ஆராய்ச்சிகளில் பல இளம் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் பேசி னார்.