districts

img

தனியார் கைத்தறி நெசவாளர்களுக்கு 30 விழுக்காடு கூலி உயர்வு வழங்க வலியுறுத்தல்

வேலூர். மார்ச் 3 - குடியாத்தம் நகரி லுள்ள தனியார் தறி உரிமை யாளர்களிடம் தொழில் செய்து வரும் கைத்தறி நெச வாளர்களுக்கு 30 விழுக்காடு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று கைத்தறி நெசவாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடி யாத்தம் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5,000 கைத்தறிகள் செயல்படுகின்றன. இவற்றில் பெருபாலான தறிகள் தனியார் முதலாளிகளுக்கு சொந்தமானதாகும். இவற்றை நம்பி உபத் தொழிலில் ஏராள மான தொழிலாளர்கள் உள்ள னர். இந்நிலையில், பிப்ரவரி 9 அன்று அரசு நிர்வாகம், தறி உரிமையாளர்கள், தொழி லாளர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தையை துவக்கக் கோரி குடியாத்தம் வரு வாய் கோட்டாட்சியரிடம் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் மனு அளிக்கப் பட்டது. ஒரு மாதத்தை கடந்தும், பேச்சுவார்த்தை துவக்கப்பட வில்லை. இதனால், ஒரு சில உரிமையாளர்கள் தன்னிச்சை யாக குறைந்த அளவு கூலி உயர்வை அறிவித்துள்ளனர். இதனால் கைத்தறி நெசவாளர் களுக்கு எவ்வித பலனும் இல்லை. எனவே, தறி உரிமை யாளர்களுடன் விரைவாக பேச்சுவார்த்தையை துவக்கி 30 விழுக்காடு கூலி உயர்வு மற்றும் 10 விழுக்காடு போனஸ் வழங்க வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரிடம் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.லெனின் மனு அளித்தார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் சி.சரவணன், பி.காத்தவராயன், வி.குபேந்திரன், கைத்தறி சங்க மாவட்டத் தலைவர் வி.பி.சங்கர், கவுரவத்தலைவர் பாபு ஆகியோர் உடனிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட நேர்முக உதவியாளர் வருவாய் கோட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மனுவின் நகலை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், மாவட்ட கைத்தறி துறை உதவி இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பினர்.