districts

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு 496 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

வேலூர், ஏப். 24 - வேலூர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 496 பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர். வேலூரை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், கடந்த மார்ச் 17 ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் காட்பாடியில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க சென்றுள்ளார். திரைப்படம் முடிந்து நள்ளிரவு 12.30 மணியளவில் 2 பேரும் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறினர். ஆட்டோ சிறிது தூரம் சென்றதும், ஆட்டோவில் பயணித்த ஆண் நண்பரை கடுமையாக ஆட்டோ ஓட்டுநர் தாக்கினார். அதன்பின்னர, ஆட்டோ ஓட்டுநர், அவரது நண்பர்க ளும் சேர்ந்து மருத்துவரை மறைவான இடத்திற்கு கொண்டு சென்று பாலி யல் வன்கொடுமை செய்துள்ள னர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சிறார் குற்றவாளி உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஏப்.15 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்ற வாளிகள் மீது 496 பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிக்கையை வேலூர் மாவட்ட காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

;