குடியாத்தம், அக். 30- வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள எர்த்தாங்கல் கிராமத்தில் குட்டைமேடு பகுதியில் உள்ள கால்வாய் மேடுப்பகுதியில் மழைக்காலங்களில் ஊற்றுகள் மூலம் வெள்ள நீர் உற்பத்தியாகி சில கிலொமீட்டர் பயணித்து எர்த்தாங்கள் கிராமம் வழியாக பெரும்பாடி ஏரிக்கு செல்ல வேண்டும். அதேபோல் சுற்றுப்புற பகுதியில் பெய்யும் மழைநீரும் பெரும்பாடி ஏரிக்கு செல்ல வேண்டும். ஆனால் ஊற்று தண்ணீரும், மழைநீரும் பெரும்பாடி ஏரிக்குச் செல்ல உள்ள வழிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் அந்த மழைநீர் செல்ல வழியில்லாமல் விளை நிலங்களுக்குள் புகுந்து பல நாட்களாக தேங்கி நிற்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மழைநீர் செல்லும் வழியில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி, ஊற்றுத் தண்ணீர் மற்றும் மழைநீர் தங்குதடையின்றி பெரும்பாடி ஏரிக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.