districts

img

விலையேற்றத்தை கண்டித்து கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர், அக்.13- கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த  ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும், கட்டுமான தொழிலாளர் சேமநல நிதியை அந்த தொழிலாளர்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். கட்டுமானத் தொழிலாளிக்கு மாத ஓய்வூதியம் ரூ.3000, இயற்கை மரணத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்டுமான சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் எம்.பி.ராமச் சந்திரன்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். பரசுராமன் துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் டி.முரளி முடித்து வைத்து பேசினார். சங்க நிர்வாகிகள் ஏ.குப்பு, சி.சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;