வேலூர் மாரச் 25 - பெண்கள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்தும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆண்டாள் , ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் கே.ராஜேந் திரன் தலைமை வகித்தனர். மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.டி. சங்கரி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.நாராய ணன், செ.ஏகலைவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ப.சக்திவேல், கே.சாமிநாதன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.இந்துமதி உள் ளிட்டோர் கலந்து உரையாற்றினர். வேலூரில் கடந்த வாரம் 17 ஆம் தேதி நள்ளிரவு பாலியல் வன்முறை யால் பாதிக்கப்பட்ட தனியார் மருத்து வமனை பெண் மருத்துவருக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும். அந்த மருத்துவருக்கு உயர் மருத்துவ சிகிச்சையும் மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச் செயலில் ஈடுபட்ட அனை வருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டன.