வேலூர், ஜூலை 14 - வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர முன்னாள் செயலாள ரும், சிஐடியு கைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளரு மான தோழர் என்.ஜோதி பாசு காலமானார். அவ ருக்கு வயது 47. கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த என். ஜோதி பாசு ஜூலை 14 அன்று மாரடைப்பால் கால மானார். அவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி யும், இரண்டு மகள்களும் உள்ளனர். குடியாத்தம் தரணம் பேட்டை பகுதியிலுள்ள அவ ரது இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, குடியாத்தம் நகரச் செயலாளர் பி.காத்தவராயன், வட்டச் செயலாளர் எஸ்.சிலம்ப ரசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன் மற்றும் பலர் மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தி னர். அவரது உடல் வெள்ளி யன்று(ஜூலை 15) காலை 11 மணிக்கு அன்னாரது இறுதி ஊர்வலம் நடை பெறுகிறது.