வேலூர் மாவட்டம் பாப்பாந்தோப்பு, அரியூர், மலைக்கோடி செங்காநத்தம் ஆகிய 3 கிராமங்களில் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் கிளை துவக்க விழா நடைபெற்றது. பெயர் பலகையை மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு திறந்து வைத்து, உறுப்பினர் அட்டையை வழங்கினார். அகில இந்திய ஆதிவாசிகள் மேடை மத்தியக்குழு உறுப்பினர் ஏ.வி.சண்முகம், சங்கத்தின் மாநிலச் செயலாளர் கங்காதுரை, தலைவர் சேட்டு, பொருளாளர் ஏழுமலை, நிர்வாகிகள் சீனிவாசன், ரமேஷ், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.