வேலூர். ஜூன் 1- வேலூர் மாவட்டம் அப்துல்லா புரம் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தி லிருந்து சிறிய விமான நிலையம் செயல்பட்டு வந்தது. ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து துறை இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய உத்தரவிட்டு அதற்கான பணி கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விமான ஓடு தளத்திற்காக மேலும் 11 ஏக்கர் நிலம் இருந்தால்தான் விமான நிலைய விரிவாக்க பணிகளை தொடர முடியும் என்பதால் இதனை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல்பாண்டியன், வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கதிர்ஆனந்த், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராம மூர்த்தி ஆகியோர் விமான நிலையப் பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், “விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக தனியாருக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலம் ஓடு தளத்திற்காக கையகப்படுத்த உள்ளோம். இதற்கான இடத்தை கண்டறிந்து அளவீடு செய்ய உத்தர விட்டுள்ளோம்”என்றார். விமான நிலையத்தின் உள்பகுதியி லுள்ள மின் கம்பங்களை அகற்றி வேறு இடத்தில் மாற்றி அமைக்க மின்வாரியத்திற்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது என்றும் விமான நிலையத்திற்குள் வரும் சுடுகாட்டையும் மாற்று இடத்தில் அமைக்க ஏற்பாடு செய்துள்ளோம் என்றும் கூறினார். தற்போது பணிகள் 80 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளோம் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.