வேலூர். மார்ச் 18- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 31ஆம் ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் 2 இடங்களில் புதிய கிளை துவக்க விழா மற்றும் கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. காட்பாடி வட்டம் பொன்னை அடுத்த எம்ப்ளாளூர் கிராமத்திலும், கோவிந்தரெட்டி பாளையம் கிராமத்திலும் புதிய கிளை துவக்கம் மற்றும் கொடியேற்று விழா மாவட்டச் செயலாளர் சி.எஸ்.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர்கள் நதியா, உஷா ஆகியோர் வரவேற்றனர். சங்கக் கொடியை மாநிலச் செயலாளர் இரா.சரவணன் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் எம்.மாரிமுத்து பெயர் பலகையை திறந்து வைத்தார். மாநில துணைச் செயலாளர் எம்.மாரிமுத்து, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சாமிநாதன், தலைவர் ப.சக்திவேல், துணைத் தலைவர் ஜி.நரசிம்மன், வழக்கறிஞர் அருண், கோவர்த்தனன் (சிஐடியு), ஆர்.சுடரொளியன், லோ.நவீன் (வாலிபர் சங்கம்) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில், அப்பகுதி மக்கள் சாதிச்சான்று, வீட்டு மனை, நிலப்பட்டா தொகுப்பு வீடுகள், தாட்கோ கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதில் கிளை நிர்வாகிகள் அம்மு, தனலட்சுமி பாஸ்கர், சிவாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.