districts

வேலூர் நில அளவையர் வீட்டில் ரூ.22 லட்சம் பறிமுதல்

வேலூர், ஜன. 30- வேலூரில் 11 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் நில அளவையர் வீட்டில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 22,84650 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் சேண்பாக்கம் கழனிக்காட்டு தெருவை சேர்ந்தவர் பாலாஜி (37). இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆ ம்பூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணி யாற்றி வருகிறார். ஆம்பூர் அருகே உள்ள மின்னூரை சேர்ந்தவர் சேகர். இவர் சென்னை யில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சேகர் தனது கிராமத்தில் உள்ள 22 சென்ட் நிலம் மற்றும் வீட்டு மனைகளை அளவிடுவதற்கான ஆன்லை னில் விண்ணப்பித்தார். இதனை தொடர்ந்து நில அளவையர் பாலாஜி, சேகரை அழைத்து பேசினார். அப்போது 4 இடங்களை அளவீடு செய்து பட்டாவை பிரித்து பதிவு செய்வ தற்காக 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள் ்ளார்.

இறுதியாக ரூ. 8 ஆயிரம் கேட்டுள் ்ளார். இதுகுறித்து சேகர் வேலூர் லஞ்ச ஒழிப்பு  காவல் துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் ஒரு மாதமாக பாலாஜியை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கண்காணித்து வந்தனர். சனிக்கிழமை (ஜன. 29) பிற்பகல் சேகரிடம் ரசாயனம் தடவிய ரூ. 8 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு காவல் துறை யினர் கொடுத்து பாலாஜியிடம் வழங்கு மாறு கூறினார். அந்த ரூபாய் நோட்டுகளை பாலாஜி லஞ்சமாக வாங்கிய போது காவல் துறையினர் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து வேலூர் சேண்பாக் ்கத்தில் உள்ள நில அளவையர் பாலாஜி யின் வீட்டில் மாலை 4 மணியளவில் சோதனை நடத்தினர்.அந்த சோதனை ஞாயிற்றுக்கி ழமை அதிகாலை 2.30 மணி வரை சோதனை நடைபெற்றது. 11 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் அவர் வீட்டில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாத 22,84,650 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப் ்பட்ட பணம் லஞ்சமாக வாங்கி குவித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை யடுத்து அவரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.