districts

விருதுநகர் தீப்பெட்டி ஆலைக் கழிவுகளை எரித்த தொழிலாளி  பலி

விருதுநகர், பிப்.16- விருதுநகர் அருகே தீப்பெட்டி ஆலைக் கழிவுகளை எரித்த போது தவறி  தீயில் விழுந்த தொழிலாளி  உயிரி ழந்தார். விருதுநகர் அருகே உள்ளது வளையபட்டி கிரா மம். இங்கு, சாத்தூரைச் சேர்ந்த பத்மநாபன் என்பவ ருக்குச் சொந்தமான ராஜஸ்ரீ என்ற தீப்பெட்டி ஆலை உள்ளது. இந்த தீப்பெட்டி ஆலையில் ஏராளமான தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆலைப் பணி முடிந்த வுடன் தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படம் ரசாயானக் கழிவு களை ஒரு குழியில் போட்டு  கொளுத்துவது  தொழிலா ளர்களின் வழக்கம். இந்தநிலையில் விருதுநகர் அருகே உள்ள கூத்திப்பாறையைச் சேர்ந்த முருகன்(55) என்ற தொழி லாளி,  ரசாயானக்  கழிவுகளை ஆலையின்  பின்புறம்  உள்ள  பள்ளத்தில் தீயிட்டு கொளுத்தியுள்ளார்.  அப்போது திடீரென மண் சரிந்து அந்தக் குழிக்குள் விழுந்து விட்டதாக கூறப்படுகிறத. அப்போது அவரது உடலில் பலத்த  தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அபயக்குரல் எழுப்பியுள்ளார். சக தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு அவரை மீட்க, வருவதற்குள்,   புகையினால் மூச்சுத் திணறிய முரு கன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.