districts

img

விருதுநகர் மாவட்ட தமுஎகச மாநாடு நிறைவு

விருதுநகர், ஜூன் 13- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட மாநாடு சனிக்கிழமை மக்கள்  ஒற்றுமைப் பேரணி-கலை நிகழ்வுகளு டன் தொடங்கியது. கலை இரவை  மாவட்டச் செயலாளர் அ.லட்சுமிகாந் தன் துவக்கி வைத்தார் படைப்பாளி களைப் பாராட்டி சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் உதய சங்கர் பேசினார். மதிப்புறு தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்டத் தலைவர் தேனி வசந்தன், எழுத்தாளர் மணிமாறன்  ஆகியோர் கருத்துரை வழங்கினர். பல்  வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன ஞாயிறன்று பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தேனி வசந்தன் தலைமை வகித்தார். செயல் அறிக்கையை மாவட்டச் செயலாளர் லட்சுமிகாந்தன், கலை இலக்கிய அறிக்கையை மாவட்டத் துணைத் தலை வர் மணிமாறன், பண்பாட்டு அறிக்கை யை மாவட்டத் துணைத் தலைவர் ரவீந்தி ரன், பொருளாளர் அறிக்கையை சண் முகம் ஆகியோர் சமர்ப்பித்தனர். மாநாட்டை மாநிலத் துணைச் செயலா ளர் நாறும்பூநாதன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் காமுத்துரை, எழுத்தாளர் மாதவராஜ், தமிழ்நாடு கலை இலக்கி யப் பெருமன்றத்தின் மாநிலத் துணைத்  தலைவர் கண்மணி ராஜா வைமா வித்யா லயா பள்ளியின் தாளாளர் வைமா திருப்  பதி செல்வன் ஆகியோர் வாழ்த்தினர். மாநாட்டை நிறைவு செய்து மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட் சண்யா பேசினார்  மாநாட்டில் 41 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது மாவட்டத் தலைவராக கே.சண்முகம், மாவட்டச் செயலாளராக அ. லட்சுமிகாந்தன், மாவட்டப் பொருளாளராக எஸ்.நித்தியானந்தம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.