districts

img

அருப்புக்கோட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது-1200 கிராம் கஞ்சா பறிமுதல்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அருப்புக்கோட்டையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பணை செய்யப்படுவதாக நகர் காவல்நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் இன்று பாளையம்பட்டி பகுதியில் நகர் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் முத்துக்குமார், நாகராஜபிரபு , தாமரைகண்ணன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கட்டங்குடி சாலையில் அக்கம்மாள் கோயில் அருகே சந்தேகபடும்படியான வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதித்ததில் அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் இ.பி.காலணியை சேர்ந்த முத்துவேல்(36) மற்றும் பாளையம்பட்டியை சேர்ந்த சரவணன்(30) என்பதும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பணை செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் கட்டங்குடியை சேர்ந்த லட்சுமணன் என்பவரை தேடி வருகின்றனர்.

;