districts

img

மருத்துவச் செலவு தொகை வழங்க கோரிக்கை ஓய்வுபெற்ற பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்

விருதுநகர், ஜூன் 7- 6 வருடங்களாக வழங்காமல் உள்ள மருத்துவச் செலவுத் தொகை யை உடனடியாக வழங்கிட வேண்  டும். பணியின் போது உயிரிழந்த ஆசிரியரின் மனைவிக்கு உடனடி யாக வாரிசு வேலை வழங்க வேண் டும். 8 ஆண்டுகளாக வழங்காமல் உள்ள ஓய்வூதியத்தை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். விரை வாக ஓய்வூதிய மறுநிர்ணயம் செய்து பணிப்பதிவேடுகளை வழங்க வேண்  டும். ஓய்வு பெற்ற உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு நல  நிதி ரூ.5 ஆயிரத்தை வழங்க வேண்  டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு  பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாநிலத் தலை வர் கோ.முரளீதரன் தலைமை தாங்கி னார். மாவட்டத் தலைவர் கா.சிவ பெருமான் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் இரா.சஞ்சீவிப்  பாண்டியன் வரவேற்றார். மாநில  துணைத் தலைவர் ச.தங்கவேல் துவக்கி வைத்தார். போராட்டத்தை ஆதரித்து ஓய்வு பெற்ற மின் ஊழி யர் சங்கத்தின் இரா.சந்தியாகப்பன் பேசினார். முன்னாள் மாவட்ட செய லாளர் வேல்சாமி நிறைவுரையாற்றி னார். இதில் ஏராளமான ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

;