districts

img

கனவு இல்லத்தை நனவாக்குங்கள் அருப்புக்கோட்டையில் நாகைமாலி எம்எல்ஏ பேச்சு

அருப்புக்கோட்டை, ஆக.20 - ஏழை-எளிய மக்களின் ‘கனவு’ இல்லத்தை நனவாக்குங்கள் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை.மாலி வேண்டுகோள் விடுத்தார்.

அருப்புக்கோட்டையில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  மக்கள் கோரிக்கை மாநாடு நடை பெற்றது. அதில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது :

அருப்புக்கோட்டை பகுதியில்  முக்கிய தொழிலாக உள்ள பாரம்பரிய மிக்க கைத்தறித் தொழிலை பாதுகாக்க வேண்டும். கைத்தறி, விசைத்தறி  தொழில் மேம்பட அரசு சார்பில் மானிய  விலையில் நூல்களை வழங்க வேண்டும்.

ஏராளமான ஏழை மக்களுக்கு பட்டா  இல்லை. நீர் நிலை புறம்போக்கு, கோவில் நிலம் என பட்டா வழங்க மறுக் கின்றனர். இதனால், ஏழை மக்கள் வீடு களை கட்ட முடியாத நிலை உள்ளது.  தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம்  திட்டம் மூலம் இந்த மக்களுக்கு பலன்  கிடைக்க வேண்டும்.

கோவில் நிலங்களில் நீண்ட கால மாக குடியிருந்து வரும் ஏழை, எளிய  மக்களுக்கு பட்டா வழங்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்து வருகிறது. அருகில் உள்ள  கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கே கோவில் நிலங்க ளில் குடியிருந்த ஏழைகளுக்கு நீண்ட  கால தவணை முறையில் பட்டா வழங்கப் பட்டுள்ளது. அங்கே வழங்கியது போல்  தமிழகத்திலும் தாருங்கள் என கேட் கிறோம்.

ஒன்றிய பாஜக அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை புதைகுழியில் தள்ளுகிற வேலையை செய்து வரு கிறது. வெறும் 86ஆயிரம் கோடி  மட்டுமே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது.  பிரதமர் மோடியின் சுதந்திர  தின உரை, வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிய கதை போல் உள்ளது. மீண்டும் ஒரே நாடு, ஒரே  தேர்தல் என கூறுகிறார். மதச்சார்பற்ற பொது சிவில் சட்டம் என்கிறார். உலக  நாடுகளில் எங்குமே இல்லாத ஜி.எஸ்.டி வரியை போட்டு  ஏழை, எளிய, நடுத்தர  மக்களை நசுக்கி வருகிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.

திருநகரத்தில் நடைபெற்ற இம்மா நாட்டிற்கு கட்சியின் நகரச் செயலாளர் எஸ்.காத்தமுத்து தலைமை வகித் தார். ஒன்றிய செயலாளர் எம்.கணேசன்,  நகர்மன்ற உறுப்பினர் எஸ்.கே.பால சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். தாமஸ், எம்.முத்துக்குமார், வி.முருகன்,  மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பூங்கோதை, பி.அன்புச்செல்வன் ஆகி யோர் பேசினர். பரமதயாளன் நன்றி கூறி னார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கந்துவட்டிக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுக!

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

விசைத்தறி தொழிலை பாது காத்திட தொழிலுக்கு வேண்டிய மூலப் பொருளான நூல்கள் குறைந்த விலை யில் கிடைத்திட ஒன்றிய அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். நெசவாளர் களுக்கு நூல் தங்கு தடையின்றி கிடைத் திட தமிழ்நாடு அரசே கொள்முதல் நிலையம் உருவாக்கி தட்டுப்பாடின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத்தறியில் கடந்த  பல வருடங்களாக கூலி உயர்த்தப்படா மல் உள்ளது. உயர்ந்து வரும் விலை வாசிக்கேற்ப கூலி உயர்வு வழங்கிட வேண்டும். வீடில்லா மக்களுக்கு வீட்டு மனைகளும் வீடு கட்ட மானியத்து டன் கூடிய கடன் வசதிகள் முறை கேடின்றி கிடைத்திட வேண்டும். அருப்புக்கோட்டையில் வீட்டுமனை கேட்டு வழங்கப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். 

24 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள இ-3 சாலை பணி களை உடனே துவங்கிட வேண்டும். இடையூறுகளை களைந்திட நிர்வாக ரீதியான நடவடிக்கை வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் தாமிர பரணி தண்ணீர் கிடைத்திட நடவடிக்கை  எடுக்க வேண்டும். அருப்புக்கோட்டை நகரில் கிராமங்களில் உள்ள சாலை களை சீரமைத்திட வேண்டும். கந்து வட்டி கொடுமைகளை தடுக்க வேண்டும்.  காட்டுநாயக்கர், குறவர் இன  மக்களுக்கு அலைக்கழிக்காமல் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்.  

இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.