districts

img

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் காளை உருவம் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை, ஜூலை 6- விருதுநகர்  மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட  உடைந்த நிலையிலான காளையின் உருவ பொம்மை கண்டுபிடிக்கப்பட்டது. வெம்பக்கோட்டையில்  கடந்த 5 ஆயிரம் ஆண்டு கால நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வட கரையில் 3 ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

முன்னதாக கண்ணாடி மணிகள், கல்மணிகள் மற்றும் பழங்கால  சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி,  கி.பி. 16 ஆம் நூற்றாண்டு நாயக்கர் கால செப்புக் காசு,  அணிகலன்கள், சங்கு வளையல்கள்  கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய் யப்பட்ட காளை உருவ பொம்மை, சுடுமண் காதணி, அலங் கரிக்கப்பட்ட சுடுமண் மணி ஆகிய தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே,  2 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடை பெற்ற போது, 10-க்கும் மேற்பட்ட திமிலுடன் கூடிய காளை உருவ பொம்மை கண்டெடுக்கப்பட்டது.

 தற்போது  மேலும் ஒரு காளை உருவ பொம்மை கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் மூலம் இங்கு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை தொன்மையான மனிதர்கள் கொண்டாடியுள்ளது உறுதி செய்யப்படுவதாக தொல்லியல் துறையினர் தெரிவித் துள்ளனர்.