districts

img

மதநல்லிணக்கம்: தேவாலயத்தில் தங்கிய மாரியம்மன் கோவில் பக்தர்கள்

விருதுநகர், ஏப்.5- விருதுநகரில் உள்ள தூய  இன்னாசியார் தேவலாயத்தில் மாரியம்மன் கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்த வந்த பக்தர்கள் தங்க இடமளித்து உதவி புரிந்தது மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் அமைந்தது. விருதுநகர் நகராட்சி சாலை யில் உள்ளது பாரம்பரியம் மிகுந்த தூய இன்னாசியார் தேவலாயம். இங்கு நாள்தோறும் கிறிஸ்தவர் கள்  வந்து ஜெப வழிபாட்டில் ஈடு படுவது வழக்கம். இந்த நிலையில், விருதுநகரில் கடந்த ஞாயிறன்று  மாரியம்மன் கோவில் பங்குனித்  திருவிழா பொங்கல் நிகழ்ச்சி நடை பெற்றது. திங்கள் கிழமை பக்தர் கள் அக்னிச் சட்டி ஏந்தி நேர்த்திக் கடனை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதுமிருந்து ஏராளமான பக் தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்த வருவது வழக்கம். அவர்கள் தங்களது உடைமைகள் மற்றும் உணவுப் பொருட்களை வைப்பதற்கு இடமின்றி தவித்து வந்தனர். அப்போது,  பக்தர்கள், ஆலய வளாகத்திற்குள் தங்குவதற்கு தூய இன்னாசியார் தேவலாய பங்குத் தந்தை அனுமதி வழங்கி னார். இதனால், இந்து பக்தர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். இதுகுறித்து, தூய இன்னாசி யார் தேவலாயத்தின் நிர்வாகிகளி டம் கேட்ட போது, ஒவ்வொரு ஆண் டும் பங்குனி மாதத்தில் மாரி யம்மன்கோவில் திருவிழா விருது நகரில் நடைபெற்று வருகிறது. இதையொட்டியே ஈஸ்டர் பண்டி கையும் வரும். அந்த மாதத்தில், இந்து மக்கள், மாரியம்மனுக்காக நோன்பு இருப்பார்கள். கிறிஸ்தவ மக்கள், ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு வரும் தவக்காலத்தில் 40 நாட்கள் நோன்பு இருப்பார்கள். இந்த வேளையில் இருமதங் களின்  திருவிழாக்களும் அடுத்த டுத்து விருதுநகரில் நடைபெறும். அந்த நேரத்தில், ஒருவருக்கு ஒரு வர் உதவுவது தான் மனிதப் பண்பு. இதைத்தான் அனைத்து மதங்க ளும் போதிக்கின்றன. அந்த அடிப் படையில், பல ஆண்டுகளாக இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் தங்குவதற்கு தூய இன்னாசியர் தேவலாய வளாகத்தை நாங்கள் இலவசமாக வழங்கி வருகிறோம். பக்தர்களுக்கான கழிப்பிட வசதி, குடிநீர் வசதிகளையும் இங்கு செய்து தருகிறோம். இதுவே விருதுநகரின் மதநல்லிணத்திற்கு நல்லதொரு அடையாளம் ஆகும் என்றார். இதற்குப்பெயர்தான் மதச்சார் பின்மை... மக்கள் ஒற்றுமை... சமூக நல்லிணக்கம்... -ஜெயக்குமார்