districts

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை

விருதுநகர், டிச.6-  விருதுநகர் மாவட்டம்  வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள் ளது  சதுரகிரி சுந்தர மாலிங்கம் கோவில். இது கடல் மட்டத்தில் இருந்து 4500 அடி  உயரத்தில் அமைந்துள்ளது. மாதந்தோறும் பிரதோசம், அமா வாசை, பௌர்ணமி மற்றும் ஒரு சில நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களாக, வனப் பகுதிக் குள் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரண மாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து  அதிகரித்துள்ளது. எனவே, திங்களன்று  நடைபெற்ற பிர தோஷ வழிபாட்டிற்கு  பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்து றையினர் திடீரெனத் தடை விதித்தனர். இதனால் பல்வேறு  பகுதிகளில் இருந்து தரிசனத்திற்காக வந்த  தந்த  பக்தர்கள்  ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.