விருதுநகர், பிப்.17- விருதுநகர் அருகே ஊராட்சி தலைவரின் கணவர் மீது தாக்குதல் நடத் தியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விருதுநகர் அருகே கட் னார்பட்டி ஊராட்சி தலை வராக இருப்பவர் ஈஸ்வரி (38). இவரது கணவர் முத்து மாணிக்கம்(42). இவரது உடன் பிறந்த தம்பி வைர முத்துவிற்கு கடந்த பஞ்சா யத்து தேர்தல் நடந்தது முதல் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், முத்துமாணிக்கம், மணல் கடத்தல் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக சந்தேகப் பட்டுள்ளனர். இந்நிலையில், வைர முத்து, முருகன், தங்கமுனி யாண்டி,பாலமுருகன், கரு ணாகரன் ஆகியோர் சேர்ந்து முத்துமாணிக்கத்தை கடு மையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகா யமடைந்த அவர், மதுரை யில் உள்ள தனியார் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஊரட்சிமன்றத் தலைவர் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின் றனர்.