districts

விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் விபத்து இராணுவ வீரர் உட்பட இருவர் பலி

விருதுநகர், பிப்.1- விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத் துக்குள்ளானதில் இராணுவ வீரர் உட்பட இருவர் உயிரிழந்தனர். விருதுநகர் அருகே உள்ள மன்னார் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வாழ வந்த குரு (22). ராணுவ வீரரான இவர் விடு முறைக்காக சொந்த ஊருக்கு வந்துள் ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வம் (20), சுந்தரபாண்டி (19) ஆகியோருடன், புளியங்குளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு, இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த னர்.  மதுரை- கன்னியாகுமரி 4 வழிச் சாலை யில் விருதுநகர் அருகே பாவாலி விலக்கு அருகே வந்த போது, எதிரே வந்த லாரி மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், வாழவந்த குரு, முத்துச்செல் வம் ஆகிய இருவரும் சம்பவ இடத்தி லேயே பலியாகினர்.  சுந்தர பாண்டி பலத்த காயங்களுடன் விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து விருதுநக்ர மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.