districts

“தமிழ்நாடு காவல்துறை” என   போலி  முகநூல் பக்கம் நடத்தி தவறான  தகவல்களை பரப்பியவர் கைது

விருதுநகர், ஏப்.12- தமிழ்நாடு காவல்துறையின் பெயரில் போலியான முகநூல் பக்கத்தை உருவாக்கி அதில் ஏராளமானேரை இணைத்து தவறான தகவல்களை பரப்பிய நபரை போலீ சார் கைது செய்தனர்.  விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்.  பட்டப் படிப்பு முடித்துள்ள இவர்,  கட்டிட வேலை செய்து வரு கிறார்.   இந்நிலையில்,   Tamil Nadu Police என்ற பெயரில்  போலியாக முகநூல் பக்கம் ஒன்றை உருவாக்கி யுள்ளார். முகப்பில் தமிழ்நாடு காவல்துறையின் இலட்சி னையையும் வைத்துள்ளார். எனவே,  இது உண்மையான முகநூல்  பக்கம் என நம்பி, சுமார் 46 ஆயிரம் பேர் இந்தக்  குழுவில் இணைந்துள்ளனர். மேலும், அதில் காவல்துறை பற்றிய பல தவறான தகவல்களையும் வெளியிட்டதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து,  விருதுநகர் மாவட்ட சைபர் க்ரைம்  பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை யடுத்து,  முகநூலில்  தமிழ்நாடு காவல் துறை சின்னத்தை  முகப்பு படமாக வைத்திருந்த அந்தக் குழுவை ஆய்வு செய்தனர்.   TAMIL NADU POLICE என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் போலியான  முகநூல் பக்கத்தில்  காவல்துறைக்கு தொடர்பற்ற போலியான பல்வேறு பதிவுகளும் இருந்துள்  ளது. இந்த முகநூல் பக்கத்தை  நிர்வகிப்பவர்  (Admin) யார்? என்பது குறித்து துரிதமாக விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே  திருத்தங்கலைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பதும், அவர்  போலீஸ் இல்லையென்பதும்  விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த  சைபர் க்ரைம் போலீசார்,  தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.  பின்பு, விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1  நீதித்துறை நடுவர் கவிதா முன்னிலையில் தமிழ்ச்செல் வனை ஆஜர் படுத்தினர். இதையடுத்து அவரை வரும்  ஏப்ரல் 25 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்