விருதுநகா் மாவட்டம் சாத்தூர் அருகே 11 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் லோடுமேன் கணேசன் (29 )திருமணம் ஆனவர்.
இவர் கடந்த 23.1.2017 அன்று 11 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வந்த புகாரையடுத்து, சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து லோடுமேன் கணேசனை கைது செய்தனர்.மேலும் இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் வியாழக்கிழமை கணேசனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் இரண்டாயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தனசேகரன் தீர்ப்பளித்தார் .