districts

img

யோகாசனத்தில் உலக சாதனை படைத்த 10 வயது சிறுமி

விருதுநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி டயர் நடுவில் உடம்பை வில்லாய் வளைத்து சமகால உருட்டல் முறையில் 100 மீட்டர் வரை லகுவ ஜராசனம் மற்றும் கண்ட பரண்டாசனத்தை இணைத்து செய்து  உலக சாதனை படைத்துள்ளார்.
விருதுநகர் அய்யனார் நகரைச் சேர்ந்தவர்கள் சுடலை வேல் - கலையரசி தம்பதி. இவர்களது மகள் ராஜ ஸ்ரீ (10).  தற்போது தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார்.  பல்வேறு யோகாசனங்களை இலகுவாக செய்து வந்த ராஜஸ்ரீ, யோகா கலையில் தனி முத்திரை பதித்து வந்தார். மேலும், யோகாவில் ஏதாவது உலக சாதனையை படைக்க வேண்டும் என விரும்பியுள்ளார். இவரது ஆர்வத்தை அறிந்த, யோகா ஆசிரியர், அவருக்கு பல்வேறு யோகசானங்களை சிறந்த முறையில் செய்வதற்கான நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து, கடந்த 7 மாதமாக  தொடர் பயிற்சிகளை வழங்கினார். இதையடுத்து, புதன்கிழமை காலை, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் லகுவஜராசனம் மற்றும் கண்ட பரண்டாசனத்தை  ஒன்றிணைத்து டயர் நடுவில் உடம்பை வில்லாய் வளைத்து 100மீட்டர் தூரம் வரை செய்து காண்பித்தார். 10 வயது சிறுமி செய்த இச்சாதனையை நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மேற்பார்வையாளர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும்  பதக்கத்தை  வழங்கினர். மேலும்  யோகாசன ஆசிரியர் ஜெயக்குமார்,  பள்ளி ஆசிரியர்கள் மற்றும்  சக மாணவிகள்  ராஜஸ்ரீயை பாராட்டினர்.