districts

img

மலைவாழ் மக்கள் சங்க கிளைகள் துவக்க விழா

ராணிப்பேட்டை, நவ.19-   ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான்கு இடங்க ளில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் துவக்க விழா நடைபெற்றது. சோளிங்கரில் ஆர்.ஆனந்தி, கணபதிபுரத்தில் எம்.பாண்டியன், பாராஞ்சியில் எஸ்.கொள்ளாபுரி, சோகனூர் கிளைத் தலைவர் எஸ்.கஜேந்திரன் ஆகியோர் தலை மையில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் கலந்து கொண்டு சங்கக் கொடியை ஏற்றி, பெயர் பலகைகளை திறந்து வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் எம்.குமார், மாநில துணைத் தலைவர் ஆர்.தமிழரசன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். ஜெயமாலினி, மாவட்டத் தலைவர் கே.சேகர், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கிட்டு, செயலாளர் எல்.சி.மணி, பொருளாளர் எஸ்.வேலு, சிபிஎம் தாலுகா செயலாளர் ஏ.பி.எம்.சீனிவாசன், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.சின்னதுரை, நிர்வாகிகள் சி.தாமோதரன், ஜெய்சங்கர், நிலவு குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.