தமுஎகச மானாமதுரை மாநாடு
மானாமதுரை, மே 23- மானாமதுரை மேல்கரையில் அரசு நூலகம் தொடர வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலை ஞர்கள் சங்கத்தின் மானாமதுரை கிளை மாநாடு வலி யுறுத்தியுள்ளது. மாநாட்டில், டாக்டர் பெருமாள், மாவட்டத் தலைவர் ஜீவசிந்தன், கிளைச் செயலாளர் ரசீந்தரகுமார், கிளைச் தலைவர் தேவதாஸ், மாவட்டத் துணைத் தலைவர் செல்வகதிரவன், மாவட்டச் செயலாளர் சங்கரசுப்பிரமணி யன், மாவட்டப் பொருளாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் மானாமதுரை மேல்கரையில் பழைய மாணவர் சங்கக் கட்டடத்தில் அரசு நூலகம் தொடர்ந்து செயல்பட வேண்டும். மானாமதுரை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாகனம் மோதி குழந்தை பலி
சாத்தூர், மே 23- சாத்தூர் அருகே குடிநீர் வாகனம் மோதி இரண்டு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. சாத்தூர் அருகே மேட்டமலையைச் சேர்ந்தவர் முத்து குமாரவேல் (32). இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகி றார். இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு மூன்று வயது பெண் குழந்தை மற்றும் சோலைராஜ் (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளது. சம்பவத்தன்று குழந்தை சோலைராஜ் தெருவில் விளை யாடிக் கொண்டிருந்தது. அப்போது தனியார் குடிநீர் வாகனத்தை பால்பாண்டி(17) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவர் வாகனத்தை பின்னால் இயக்கிய போது, குழந்தை மீது வாகனம் ஏறியது. அதில், சம்பவ இடத்திலேயே அக் குழந்தை உயிரிழந்தது. சாத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் துன்புறுத்தல் வழக்கு 800 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
விருதுநகர், மே 23- விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு தொடர்ந்து எட்டு மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கடந்த மார்ச் மாதம் விருதுநகர் மேலத்தெரு வைச் சேர்ந்த ஹரிஹரன் (27), அவரது நண்பர்களாக ஜூனத் அகமது (27), ரோசல்பட்டியைச் சேர்ந்த பிரவீன் (26), பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறிமுகமான மாடசாமி (37), ஆகியோரும், பள்ளி மாணவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த வழக்கு தொடர்பான சுமார் 806 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் வினோதினி திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் திங்களன்று தாக்கல் செய்தார்.
மே 27 தேனியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
தேனி, மே 23- தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மே 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. தேனி மாவட்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்திலுள்ள வேளாண்மை சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.
மதுரை-தேனி ரயில் இயக்கம்
10 ஆண்டு காலப் போராட்டத்திற்கு வெற்றி
தேனி, மே 23- மதுரை, திண்டுக்கல்-லோயர் கேம்ப் அகல ரயில் பாதை திட்ட அமலாக்குக் குழு தலைவர் ஏ.லாசர் திங்களன்று தேனியில் செய்தியாளர்களைச் சந் தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மதுரை-தேனி ரயில் இயக்கம் பத்து ஆண்டு காலம் நடத்திய போராட் டத்திற்கு கிடைத்த வெற்றி. அதே நேரத்தில் எஞ்சியுள்ள போடி வரை யிலான திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மதுரை வரை இயக்கப் படும் ரயில் சேவையை தேனி மாவட்ட மக்கள் பயனடையும் வகையில், சென்னை, இராமேஸ்வரம் மற்றும் செங்கோட்டை வரை நீட்டிக்க வேண் டும். போடி - மதுரை அகல இரயில் பாதை திட்டம் துவங்கிய பின்பு தேனி நகர் பகுதியில் மூன்று ரயில்வே கிரா சிங் அமைந்திருப்பதால் நகர் பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவே மேம்பாலம் கட்டுவதற்கு ஆய்வு மட்டுமே செய்தி ருக்கும் நிலையில் நிதி ஒதுக்கீடு செய்து மேம்பாலங்கள் கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும். லோயர்கேம்ப் அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கேரளாவில் இருந்து சென்னைக்கும் செல்லவும், வர்த்தகம், அய்யப்ப பக்தர்களுக்கு பெரும் உதவி யாக இருக்கும். இந்த ரயில் பாதைத் திட்டத்தை முன்னிறுத்தி தங்களின் அடுத்த கட்ட போராட்டங்கள் நடை பெறும் எனத் தெரிவித்தார்.
துளிர்கள் மாநாடு
திருவில்லிபுத்தூர், மே 23- திருவில்லிபுத்தூரில் துளிகள் அமைப்பின் பத்தாவது ஒன்றிய மாநாடு பத்தாவது ஒன்றிய மாநாடு மகாத்மா வித்யா லயா பள்ளியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய தலை வர் அமுதா தலைமை விகித்தார். கிருஷ்ணவேணி முன் னிலை வகித்தார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூத்த உறுப்பினரும் எம்.இராமர் மாநாட்டை துவக்கி வைத்தார் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஆலோ சகர் முன்னாள் பேராசிரியர் வி.சுரேஷ், அமைப்பின் மாநிலச் செயலாளர் பரமசிவம், நண்பர்கள் ரோட்டரி கிளப் தலை வர் வேலாயுதம் மகாத்மா வித்யாலயா பள்ளி முதல்வர் ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துணிகள் அமைப் பின் மாவட்ட நிர்வாகி அங்கம்மாள் மாநாட்டை நிறைவு செய்து பேசினார் புதிய நிர்வாகிகள்: தலைவர்: பி.பழனி யம்மாள், செயலாளர்: கே.சுப்புலட்சுமி, பொருளாளர்: பி. பேச்சியம்மாள்.
ஊராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு காப்பீடு அட்டை வழங்க வலியுறுத்தல்
விருதுநகர், மே 23- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் ஏராள மான துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்ற னர். இவர்களிடம் மாதந்தோறும் மருத்துவ காப்பீடு என்ற பெயரில் ரூ.180 வசூலிக்கப்படுகிறது. ஆனால், தற்போது வரை மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்படவில்லை. எனவே, திங்களன்று பல்வேறு ஊராட்சிகளைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கிடக் கோரி மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
வச்சக்காரப்பட்டி ஊராட்சியில் தெருவில் தேங்கும் கழிவு நீர்
விருதுநகர், மே 23- விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது வச்சக்கா ரப்பட்டி. இங்குள்ள ரயில் நிலைய சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில், அங்கு சாக்கடை தேங்கி கிடப்பதால் பெரும் சுகாதார சீர் கேடு நிலவி வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் தேங்கிய கழிவு நீரை அப்புறப்படுத்தக் கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தீயில் எரிந்து வீடு, ஆடுகள் நாசம்: நிவாரணம் வழங்க கோரிக்கை
விருதுநகர், மே 23- விருதுநகர் அருகே உள்ளது நந்திரெட்டியபட்டி. இப்பகுதியைச் சேர்ந்தவர் சோலை(46). விவசாயத் தொழி லாளியான இவரது வீட்டில் கடந்த மே 12ல் தீப்பிடித்தது. இதில் வீட்டிலிருந்த பொருட்கள், ஆவணங்கள், ஆடுகள் உள்ளிட்டவை அனைத்தும் எரிந்து போயின. இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், தனது சொந்த நிதியிலிருந்த சோலைக்கு ரூ.15 ஆயிரம் உதவித் தொகை வழங்கினார். அதேநேரத்தில் அரசிடம் இருந்த உரிய நிவாரணம் வழங்கப்படவில்லையென பாதிக்கப் பட்ட சோலை, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
மதிமுகவிலிருந்து நீக்கம்
மதுரை, மே 23- மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து புலவர் சே.செவந்தியப்பன், ஆர்.எம்.சண்முகசுந்தரம், டி.ஆர். ஆர்.செங்குட்டுவன் ஆகியோர், அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சியில் அவர்கள் வகித்து வரும் மாவட்டச் செய லாளர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
புகையிலை பறிமுதல்
திருவில்லிபுத்தூர், மே 23- திருவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பெட்டிக் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக காவல் சார்பு ஆய்வாளர் சக்திவேலுக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் 8.5 கிலோ புகை யிலையை பறிமுதல் செய்து திருவில்லிபுத்தூர் மாயாண்டிபட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் குருசாமி (47)-யை காவல்துறை யினர் கைது செய்தனர்.
அரசு மற்றும் விவசாயிகளுக்கு சொந்தமான 370 ஏக்கர் நிலம் மோசடியாக தனியாருக்கு பதிவு
விருதுநகர், மே 23- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள மொச்சிபத்தி, பூலாபத்தி யில் அரசுக்கு சொந்தமான மற்றும் 200 விவ சாயிகளுக்கு சொந்தமான 369.69 ஏக்கர் நிலத்தை தனி நபருக்கு பத்திரப் பதிவு செய்ததை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் வி.முருகன் தலைமையில் விவசாயி கள் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி யை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: காரியா பட்டி வட்டத்திற்குட்பட்ட மாங்குளம், மொச்சிபத்தி, பூலாபத்தி, அச்சுப்பிள்ளை யரைநேந்தல், துலக்கன்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 200 விவசாயி களுக்கு செந்தமான நிலம் உள்ளது. இதில் ஐந்து தலைமுறைகளாக விவசாயிகள், மா, தென்னை, நெல், மல்லிகை, கொய்யா, வெங்காயம், பருத்தி, கத்தரிக்காய் போன்ற வற்றை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்த நிலங்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் மனுத்தாக்கல் செய்த தனி நபர் ஒருவர், நீதிமன்றத்தில் தவறான அனுமதி பெற்று அவரது மனைவிக்கு பவர் பத்திரம் பெற்றுள்ளார். அதில் அரசுக்குச் சொந்த மான நிலமும் உள்ளது. மேலும், வண்டிப் பாதை, மயானம், கண்மாய், குளம் ஆகிய வையும் உள்ளது. எனவே, பத்திரப் பதிவில் ஈடுபட்ட மாவட்ட, வட்ட பத்திரப் பதிவாளர் மற்றும் போலியாக பதிவு செய்த தனிநபர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற் படி நபர் கடந்த 2009-ஆம் ஆண்டு இதே நிலங்களை போலியான ஆவணங்கள் தயார் செய்து பத்திரப் பதிவு செய்தார். அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலைமையில் தொடர் போராட்டங்கள் நடத்தி, 2012-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி அப்பதிவு மாவட்ட பதிவாளரால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது எனக் கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலி
திருநெல்வேலி, மே 23- நெல்லை மாவட்டம் பணகுடி நான்கு வழி சாலை யில் இருந்து தண்டையார் குளம் செல்வதற்கு பிரிவு சாலை உள்ளது. திங்கள் காலை இந்த பிரிவு சாலை யில் கீழ்புறம் இருந்து பணகுடி ஊருக்கு கரையடி கால னியை சேர்ந்த தொழிலாளி ஹரிகிருஷ்ணன் ( வயது 60) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அப்போது திருச்சியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஹரி கிருஷ்ணன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பண குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் விரைந்து சென்று ஹரிகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் லாரி மற்றும் மோட்டார் சைக்கிளை பணகுடி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.
மாற்றுத்திறனாளிகள் மாநாடு
இராஐபாளையம், மே 23- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் இராஜபாளையம் நகர் மாநாடு நக்ர தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற் றது. சங்கக் கொடியை மாநி லச் செயலாளர் முத்து காந் தாரி ஏற்றினார். மாவட்டச் செய லாளர் கே.நாகராஜ் சிறப்பு ரையாற்றினார். வேலை அறிக் கையை நகர் செயலாளர் பாக்கியராஜ் தாக்கல் செய் தார். மாதர் சங்கத் தலைவர் மைதிலி, தமுஎகச தலைவர் நந்தன் கனகராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வீர மணி நன்றி கூறினார். மாநாட்டில் இராஜபாளை யம் நகர் தலைவராக பாக்கி யராஜ், செயலாளராக சரவ ணன், பொருளாளராக வீர மணி உட்பட 14 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட் டது.
100 நாள் வேலையில் முறைகேடு? ஒன்றிய அலுவலத்தில் திரண்ட பெண்கள்
கள்ளிக்குடி, (மதுரை), மே 23- மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.வெள்ளாகுளம் ஊராட்சிக்குட்பட்ட சுந்தரங்குண்டு கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கண்மாய் பகுதியை சுத்தம் செய்து மரக்கன்றுகள் நடும் பணிகள் நடை பெற்று வருகிறது. இங்கு பணிபுரியும் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் இன்று கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது:- 100 நாள் வேலையில் மோசடி நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பணி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். 100 நாள் அட்டை புதுப்பித்தல், புதிய அட்டை வழங்குவதில் எங்கள் கிராமத்தில் தேவையற்ற சிக்கலை எழுப்புகின்றனர். அட்டைக்கு பணம் கேட்கின்றனர். இது தொடர்பாக தமிழக அரசும், ஒன்றிய அரசும் எந்த உத்தரவும் பிறப்பிக்க வில்லை என விபரமறிந்தவர்கள் கூறுகின்றனர் என்றனர். மேலும் எங்கள் கோரிக்கை, பிரச்சனைகளை ஒன்றிய அலு வலகத்தில் மனுவாக அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றனர்.
கோவில்பாப்பாகுடி ஊராட்சிப் பள்ளியின் நிலை மாதர் மாநாடு கவலை
மதுரை, மே 23- மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் கோவில்பாப்பாகுடி கிராமத்தில் செயல்பட்டுவரும் ஊராட்சிப் பள்ளியின் மீது மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி ஒன்றியமும் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மேற்கு ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது. கோவில்பாப்பாகுடி ஊராட்சிப்பள்ளியில் போதுமான கழிப்பறை வசதியில்லை. மாணவர்கள் பள்ளிக்கு எதிரில் உள்ள சிறு ஓடையை பயன்படுத்தி வருகின்றனர். இது ஆபத்தானது. மாவட்ட நிர்வாகமும், ஒன்றிய நிர்வாகமும் உடனடியாக பாதுகாப்பான கழிப்பறை வசதியை செய்து தர வேண்டும். 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள முதியோர், வித வைகள் பென்சனை உடனடியாக வழங்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். ஒன்றியத் தலைவராக கே.அமிர்தவள்ளி, செயலாள ராக எஸ்,சரஸ்வதி, பொருளாளராக சி.இந்திரா ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் மாநிலச் செயலா ளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டத் தலைவர் பிரேம லதா, செயலாளர் சி.முத்துராணி ஆகியோர் பேசினர்.
இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த தாய்
மதுரை, மே 23- மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள முத்துப்பட்டி யை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி நித்யா (25) ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறு பாடு காரணமாக நித்யா தனது நான்கு வயது மகள் ரக்ஷனா, இரண்டு வயது மகள் தர்ணிகாஸ்ரீ ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் திங்களன்று மாலை விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேலூர் காவல்துறையினர் விசாரித்தனர்.