districts

img

உறைபனி தாக்கம் அதிகரிப்பு: அவலாஞ்சியில் ஜீரோ டிகிரி வெப்பநிலை

உதகை, ஜன.12- நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக உறைபனி தாக்கம் அதிகரித்துள்ளது. தாவரவியல் பூங்கா, எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதான புல்வெளிகளில் உறை பனி படர்ந்து காணப்படுகிறது. இதனிடையே அவலாஞ்சி பகுதி யில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவு அதிகமாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக உறைபனி  தாக்கம் தொடங்கும். குறிப்பாக உதகை,  குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில்  கடும் உறைபனி பொழிவு ஏற் படும். ஆனால், கடந்த ஆண்டு  பருவமழை தாமதமாக தொடங்கிய தால் பனிக்காலமும் தாமதமாக தொடங்கியது. இதற்கிடையே குன்னூர் பகுதியில் கடந்த டிச.25 ஆம் தேதி முதல் டிச.27 ஆம் தேதி  வரை அதிகளவு மழை பெய்தது. இந்நிலையில், கடந்த 4 நாட் களாக குன்னூர் பகுதியில் உறை பனி தாக்கம் அதிகரித்து வருகிறது.  குன்னூர் அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் உறைபனி கொட்டி கிடந்தது. மேலும், கடும் குளிர் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும், மாலை முதல் மறு நாள் அதிகாலை வரை கடுங் குளிரும் நிலவி வருகிறது. இதனி டையே குன்னூர் பகுதியில் செவ்வாயன்று குறைந்தபட்சமாக 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை யும், புதனன்று 9.2 டிகிரி செல்சியஸ்  வெப்பநிலையும் பதிவானது.

மேலும், உதகை அரசு தாவர வியல் பூங்காவில் கடந்த நான்கு நாட்களாக உறைபனி தாக்கம் அதிகரித்த நிலையில், புதனன்று குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி  செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி, கோர குந்தா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல் உறைபனி படர்ந்து காணப் பட்டது. குறைந்தபட்ச வெப்ப நிலை ஜீரோ  டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பகல் நேரங்களில் கடும் வெயிலும்,  மாலை, அதிகாலை நேரத்தில் கடுங் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி  ஜெயபாலகிருஷ்ணன் கூறுகையில், உதகையை பொறுத் தவரை நவம்பர் இரண்டாவது வாரம் முதல் பிப்ரவரி இரண்டாவது வாரம் வரை குளிர்காலமாக இருக்கும். தெளிவான வானம், காற்றின் வேகம் குறைவாக இருந்ததால் கடந்த நான்கு நாட் களாக உறைபனி தாக்கம் அதிக ரித்துள்ளது. பொங்கல் வரைக்கும்  உறைபனி தாக்கம் இருக்கும். பொங்கலுக்கு பின், படிப்படியாக குறைந்து வெப்பநிலை அதிகரிக் கக்கூடும், என்றார். உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்  கூறுகையில், காலநிலை மாற்றத் தால் சளி, காய்ச்சல், புதிய வைரஸ்  தொற்று பாதிப்பாக யாரும் வர வில்லை, என்றார்.