districts

img

பாளையத்தில் இளைஞர் திறன் திருவிழா

தேனி, ஜூலை 24- உத்தமபாளையம் தனியார் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க(மகளிர் திட்டம்)த்தின் சார்பில், சனிக்கிழமை இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீ தரன் தலைமை வகித்தார். கம்பம் சட்டமன்ற உறுப்பி னர் என்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்  இரா.தண்டபாணி, மகளிர் திட்ட அலுவலர் ஜெ.ரூபன்  சங்கர்ராஜ், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சி யர் கௌசல்யா, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றி யக்குழுத் தலைவர் இன்பென்ட் பணிமயா ஜெப்ரின் உட்பட பலர் கலந்து கொண்டனர். உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டு, இந்த இளைஞர் திறன் திருவிழாவில் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம்,மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் பயிற்சி நிறுவனங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் கனரா  வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் உள்ளிட்ட 17 பயிற்சி மையங்கள் கலந்து கொண்டு, பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரிவித்தார்.