சிவகங்கை, டிச.22- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் வேதியரேந்தல் கிராமத்தில் தொடர் ஆடு திருட்டை தடுக்க கிராமத்தின் பல்வேறு தெருக்களில் பிர தான வீதிகளில் சிசிடிவி கேமராவை கிராமத்து இளை ஞர்கள் பொருத்தியுள்ளனர். இது தொடர்பாக நாகராசன் கூறுகையில், விவசாயம் தான் பிரதானமான வாழ்வாதாரம்.விவசாயம் செய்ய வேண்டும் என்றால் தண்ணீர் அவசியமாகும். வைகை ஆற்றின் கரையில் உள்ள ஊர் வேதியரேந்தல் கிராமம்.இக் கிராம கண்மாய் வைகை பாசனத்தில் உள்ளது. வேதியரேந்தல் கண்மாய்க்கான கால்வாய் தூர்ந்து போய்விட்டது. இதனால் உப்பாற்றிலிருந்து சுப்பன் கால்வாய் உருவாக்கப்பட்டது. இந்த கால்வாயில் எட்டு வருடம் முன்பு தண்ணீர் வந்து கண்மாய் நிரம்பியது.அதன் பின்பு தண்ணீர் வரவில்லை. இந்த கால்வாயை மேம்படுத்தி தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயத்தோடு சேர்த்து ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறோம். ஆடுகளை திட்டமிட்டு திருடு கிறார்கள். திருட்டை கண்டுபிடிப்பதற்காக வேதிய ரேந்தல் இளைஞர்கள் சொந்த செலவில் சிசிடிவி கேமரா பொருத்தியிருக்கிறோம். ஏற்கனவே சிசிடிவி கேமரா பொருத்த தரையில் கேபிள் பதித்து போட்டோம்.புதிய சாலை அமைத்ததால் ஏற்கனவே போட்ட கேபிள் பய னற்று வீணானது. தற்போது மீண்டும் செலவு செய்து சிசிடிவி கேமிரா பொருத்தியுள்ளோம். கிராம மக்கள் அரசு மேல்நிலைப்பள்ளி உருவாக்க பத்து ஏக்கர் நிலம் வழங்கி உள்ளோம். அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட அனைத்து நடவடிக்கைகளும் கிராமம் சார்பில் செய்துள்ளோம்.அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டும். இத்தோடு ஆரம்ப சுகாதார நிலை யம் அமைக்க அதற்குரிய நிலம் கிராமம் சார்பில் வழங்கி உள்ளோம். ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக அதிகாரி கள் ஆய்வு மேற்கொண்டு சென்றார்கள்.இங்கு மாணவ, மாணவிகளுக்கு அரசு விடுதிக் கட்டிடம் கட்டி கொடுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.