தேனி, ஏப்.23- இளைஞர்களக்கு வேலை கேட்டு இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சைக்கிள் பிரச்சாரம் தேனி மாவட்டம் கம் பத்தில் சனிக்கிழமையன்று தொடங்கியது. இளைஞர்களுக்கு வேலை கேட்டு தமி ழகத்தின் நான்கு முனைகளில் இருந்தும் கடந்த 21-ஆம் தேதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சைக்கிள் பயண பிரச்சாரம் தொடங்கியது. இதனை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் துணைப் பிரச்சாரப் பயணம் கம்பத்தில் தொடங்கி யது. பிரச்சாத்திற்கு மாவட்டத் தலைவர் கே.ஆர்.லெனின், செயலாளர் சி.முனீஸ்வ ரன், பொருளாளர் டி.ராஜா மற்றும் நிர்வா கிகள் அருண்குமார், சவுந்தரபாண்டியன், முத்துக்குமார் ஆகியோர் தலைமை வகித்த னர். சைக்கிள் பிரச்சாரத்தை வாலிபர் சங் கத்தின் முன்னாள் மாநில பொருளாளர் டாக்டர் எஸ்.முருகன் தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணா மலை பயணக்குவினரை வாழ்த்திப் பேசி னர். க.புதுப்பட்டி, பாளயம், கோம்பை, பண்ணைப்புரம், மேலசிந்திலச்சேரி, புலிக்குத்தி, மார்க்கேயன்கோட்டை, சின்ன மனூர் ஆகிய இடங்களில் சைக்கிள் பிரச்சா ரத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட் டது. இரண்டாம் நாளாக ஏப்ரல் 24 அன்று தேனி, ஆண்டிப்பட்டி, ஜெயமங்கலம், வடு கப்பட்டி, பெரியகுளம் உள்ளிட்ட இடங்க ளில் பிரச்சாரம் நடைபெறுகிறது.