மதுரை, மார்ச் 20- போதைப்பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையில் வாலிபர் சங்கத்தினர் தமிழகம் முழு வதும் ஒரு கோடி கையெ ழுத்துகள் பெற்றுவருகின்ற னர். அதனொரு பகுதியாக மதுரை சின்னப்பட்டி பெண் கள் மேம்பாட்டு சங்கம்-இந் திய ஜனநாயக வாலிபர் சங் கம் இணைந்து போதை தவி ர்ப்பு விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டு கையெழுத்து கள் பெறப்பட்டது. நிகழ்விற்கு ஆன்டனா டிரஸ்ட் மாலை நேர கற்றல் மையம் கலாவதி தலைமை வகித்தார். வாலிபர் சங்க மதுரை புறநகர் மாவட்டப் பொருளாளர் எஸ்.பால கிருஷ்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் வி.திரு தரன், சின்னபட்டி பெண்கள் மேம்பாட்டு சங்க ஒருங்கி ணைப்பாளர் சந்திரலேகா, அமெரிக்கன் கல்லூரி பேரா சிரியர் எம்.சுரேஷ்குமார், அடோனை குடிபோதை மற்றும் மனநல காப்பகம் ஜோஸ்வா, பள்ளி மாண வர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.