தேனி, டிச.18- பெரியகுளம் தாலுகா வில் அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரி துவங்க வேண்டும் என இந்திய ஜன நாயக வாலிபர் சங்க பெரிய குளம் தாலுகா மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் பெரியகுளம் தாலுகா 9 ஆவது மாநாடு பி.மணிகண்டன் தலைமை யில் நடைபெற்றது . மாவட் டக் குழு உறுப்பினர் ஆர்.காளிச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினரும், பெரிய குளம் நகர்மன்ற உறுப்பினரு மான எம்.மதன்குமார் வர வேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்டத் தலைவர் கே.கரண்குமார் பேசினார் .ஆசிரியர் சங்க தலைவர்கள் சங்கர், லட்சுமி நாராயணன், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச்செயலா ளர் கே.ஆர்.லெனின்,மாதர் சங்க செயலாளர் ஜெயப் பாண்டி ஆகியோர் வாழ்த்தி பேசினர் . மாவட்டச்செயலாளர் சி.முனீஸ்வரன் உரையாற்றி னார். மாநில துணைச்செய லாளர் கே.ஆர்.பாலாஜி நிறைவுரையாற்றினார். மாநாட்டில் தாலுகா தலைவராக பி.மணிகண் டன், செயலாளராக பி.பிரேம் குமார், பொருளாளராக எம். மதன்குமார், துணைத் தலை வர்களாக நாகப்பாண்டி, தன லட்சுமி துணை செயலாளர் களாக பெருமாள்சாமி, நாக லட்சுமி உள்ளிட்ட புதிய தாலு காக்குழு தேர்வு செய்யப் பட்டது. பெரியகுளத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்திட வேண்டும். வேளாண்சார்ந்த தொழிற் சாலைகள் ஏற்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.