மதுரை, டிச.22- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மதுரை புறநகர் மாவட்ட சிறப்பு பேரவை திருப்பரங்குன்றம் கே. பி. ஜானகிஅம்மாள் நினைவு அரங்கத்தில் மாவட்டத் தலை வர் பி.தமிழரசன் தலைமையில் நடைபெற் றது. அவனியாபுரம் பகுதிச் செயலாளர் கருப்புசாமி வரவேற்றார். துவக்கி வைத்து மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் பேசி னார். மாநிலச் செயலாளர் சிங்காரவேலன் நிறைவுரையாற்றினார். பேரவையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக வி.கருப்பசாமி,மாவட்டச் செயலாளராக பி.தமிழரசன் மாவட்டப் பொருளாளராக எஸ்.பாலகிருஷ்ணன், உட்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.