districts

img

அமைச்சர் உத்தரவால் குட்டத்துப்பட்டி மக்களுக்கு யோகம்

சின்னாளபட்டி, ஏப்.25- திண்டுக்கல் மாவடடம் குட்டத்துப்பட்டி யில் கூட்டுறவுத்துறை சார்பாக கால்நடை பராமரிப்பு கடன்  மேளா நடைபெற்றது. திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி துணைப் பதிப்பாளர் மற்றும் முதன்மை வருவாய் அலுவலர் அன்புக்கரசன், கள  மேலாளர் தமிழ்குமரன்,  சரக மேற்பார்வை யாளர்கள் சசிக்குமார், முத்துப்பாண்டி, கூட்டுறவு சங்கச்  செயலாளர்கள் கலை யரசி, சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடை விவசாயிகளிடமிருந்து 1,292 மனுக்களைப் பெற்றனர்.  கடன்மேளா குறித்து  குட்டத்துப்பட்டி யை சேர்ந்த கிளாரா மேரி கூறுகையில், “எங்கள் பகுதி மக்களுக்கு கூட்டுறவு சங்க செயலாளர் கடனுதவி கொடுக்க மறுக்கி றார் என அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கூறினோம். இதையடுத்து  24 மணி நேரத்தில் கடனுதவி வழங்க சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. சுமார் ரூ.10 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்து கடனுதவி வழங்க முடிவு செய்துள்  ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தரப்  பில் கூறப்பட்டது.