திருவில்லிபுத்தூர், ஜூன் 23- திருவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் குளத்தில் உள்ள சத்யா வித்யாலயா (சிபிஎஸ்இ) பள்ளியில் உலக யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி குழும தலைவர் குமரேசன், டிரஸ்டி டாக்டர் சித்ரா, துணை தலைவர்கள் அரவிந்த், மோனிஷா ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி முதல்வர் செந்தில்குமார் ,துணை முதல்வர் அனுஷ்யா, ஆலோசகர் பாரதி ,நிர்வாக அதிகாரி அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மாணவி ஐஸ்வர்யா வரவேற்றுப் பேசினார். பள்ளி மாணவ, மாணவியர் பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் அலுவலர்கள் பணியாளர்கள் செய்திருந்தனர்.