தேனி, மார்ச் 5- தேனி புத்தகத் திருவிழாவில் மண் ணின் எழுத்தாளர்கள்-கலைஞர்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் கௌரவிப்பு செய்து வருவதற்கு தேனி ஆட்சிய ருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பழனிசெட்டிபட்டி அருகே ‘வாசிப்பை வசமாக்குவோம்’ என்ற முழக்கத்துடன் தேனியில் முதல் புத்தக திருவிழா -2023 ஐ வெள்ளிக்கிழமையன்று அமைச் சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத் தார். புத்தகத் திருவிழாவில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ,தலைசிறந்த சொற்பொழிவாளர்களை அழைத்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களை கண்காட்சிக்கு அழைத்து வந்து ஊக்கப்படுத்தி வருகிறது. ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்வில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி ,யாழ் ராக வன் ஆகியோர் உரையாற்றினர் .திங்க ளன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்க மாநிலத் தலை வர் மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்று கிறார் .நிகழ்வுகளில் மாவட்ட நிர்வா கம் சார்பில் மண்ணின் எழுத்தாளர்கள் ,கலைஞர்களை அழைத்து சால்வை அணிவித்து ,நினைவு பரிசு வழங்கப்படு கிறது. இதனால் உள்ளூர் எழுத்தா ளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு மண்ணின் மைந்தர்கள் எழுதிய புத்தகங்கள் ,பதிப்பகங்கள் தனியாக காட்சிப்படுத்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஒருங்கிணைத்து தனி அரங்கு ஏற் படுத்தியுள்ளது .அரசு பள்ளி மாண வர்களை புத்தகம் வாங்குவதற்கு ஊக்குவிக்கும் பொருட்டு ரூ.100-க்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது .ஒவ்வொரு நாளும் ரூ.500-க்கு மேல் புத்தகங்கள் வாங்குபவர்களில் குலுக் கல் முறையில் 3 பேர் தேர்வு செய் யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங் கப்பட உள்ளன. மேலும் அங்கு சிறைத் துறை சார்பில் சிறைக் கைதிகள் பயன்பெறும் வகையில் புத்தகங்களை பொதுமக்கள் வழங்கிட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பள்ளி மற்றும் நூலகங்களுக்கு புதிய மற்றும் வாசித்த புத்தகங்களை கொடையாக வழங்கிட ‘நூல் கொடை’ என்ற பெயரில் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. அது போல சிறைக்கைதிகள் பயிலும் வகையில் நூல் நன்கொடை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இதனால் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு குவிகிறது.